Facebook Twitter RSS

Saturday, February 23, 2013

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?



      முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)


                                            நிகழ்கால சூழ்நிலைகளில் முஸ்லீம்களாகிய எமது வாழ்வு ,நடத்தை என்பவற்றின் மீது கேள்வி எழுப்பும் ஒரு வசனமாகவும் , ஒரு முஸ்லிமின் நடத்தை இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த வசனம் அமைந்துள்ளது . ரசூல் (ஸல் ) அவர்களின் நடத்தை வழி ஆதாரத்தின் படி நிராகரிப்பாளர்களின் மீது கடுமை காட்டுதல் என்பதன் அர்த்தமாவது இஸ்லாம் அல்லாத சிந்தனா வாதத்தின் கடும் பிடியாளர்களோடு ,ரசூல் (ஸல்) பலத்தோடு இருந்த சந்தர்ப்பத்திலோ அல்லது எதிர்க்க பலமற்று இருந்த சந்தர்ப்பத்திலோ எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? என்ற விளக்கத்தை சுற்றியே எம்மை பார்க்கத் தூண்டவேண்டும். அதன்படி மனித நேயம் என்ற எல்லைக்குள் இஸ்லாமிய சிந்தனா வாதத்தை பரிகசிக்காத ,எதிர்க்காத மனிதர்கள் மீது ஒரு கண்ணியமான உறவை பேணுதல் என்பதும் இஸ்லாத்தின் கட்டளை என்பதை சுன்னா தெளிவாகவே எமக்கு காட்டி நிற்கும் . 

                                                 ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் முஸ்லீம்களின் நடத்தை என்பது இந்த வஹி வழிகாட்டலுக்கு மாற்றமாக , தலைகீழாகவே அமைந்துள்ளது !! (அதே நேரம் அல்லாஹ்வின் உதவியையும் ,பொருத்தத்தையும் வேறு எதிர்பார்க்கிறார்கள் ! )அதாவது அந்த நடத்தை நிராகரிக்கும் சிந்தனா வாதத்தோடு சமரசம் செய்தல் , இணங்கிப் போதல் , அந்த 'குப்ரிய ' சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைந்த வாழ்வியல் வாதங்களுக்கு சார்பாக இஸ்லாத்தை திரித்துக் கூறுதல் ,பேசவேண்டிய தருணங்களில் மௌனம் காக்கத் தூண்டுதல் போன்ற நடத்தைகளின் ஊடாக 'குப்ரை' திருப்திப் படுத்துவதோடு , விரல் நீட்டி இந்த இயக்கத்தின் நடத்தை போல் எமது நடத்தை இல்லை , அந்த அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருகிறது , இவர்கள் தீவிரவாதிகள் என காட்டிக் கொடுத்து குப்பார்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இனி வாழ்க்கை உள்ளது; என செயல்படவும் தொடங்கி விட்டார்கள் .

                                            கீழே வரும் சம்பவங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் போது  , நிராகரிப்பவர்களின் அதிகாரத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ வாழும் நிலை ஏற்பட்டால் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .

                                      ரசூல் (ஸல் ) அவர்கள் ஒருமுறை குறைசிக் காபிர்களின் கடுமையான நக்கலுக்கும் ,நையாண்டிக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது . அப்போது அந்த காபிர்களின் முன் நின்று கோபப்பட்டவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பின்வருமாறு கூறினார் ." குறைசிகளே ! நான் சொல்வதை சற்று கவனியுங்கள் . எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ! உங்களிடத்தில் நான் உங்களை அழிவிற்கு இட்டுவிடும் ஒரு முடிவை கொண்டே வந்துள்ளேன் . (அதாவது அதி விரைவாக உங்கள் கதை முடிந்து விடப் போகிறது )"என்ற  இவரின் இந்த ஆவேசமான வார்த்தைகள்  குறைசிகளை திடுக்கிட வைத்தது. 

                                                      இதே போல இன்னொரு சம்பவம் இது உமர் (ரலி ) இஸ்லாத்தை தழுவிய நேரம் நடந்தது . அவர்கள் தான் இஸ்லாத்தை தழுவிய செய்தியை யாரிடம் சொன்னால் அது பகிரங்கமாகும் ? என விசாரித்ததில் 'ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜுமகி 'என அறிந்து அவனிடம் சொன்னார்கள் .அவன் மக்கள் மத்தியில் சென்று "ஓ  குறைசிகளே !கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான் " என்று கத்தினான் . அவனோடு கூடச் சென்ற உமர் (ரலி ) " இல்லை இவன் பொய் கூறுகிறான் .நான் மதம் மாறவில்லை .மாறாக முஸ்லிமாகி விட்டேன் ." என்று கூறியவுடன் . காபிர்கள் ஓன்று கூடி அடிக்க ஆரம்பித்தார்கள் உமர் (ரலி )யும் அவர்களோடு சண்டையிட்டார்கள் .இறுதியில் அவர்கள் களைத்து சோர்ந்து விடும் நிலைக்கு வந்த போது கூறினார்கள் . "உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஓன்று மக்கா உங்களுக்கு அல்லது எங்களுக்கு என ஆகிவிடும் " என்று கூறினார்கள் .

                                   இந்த சம்பவத்தின் பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) வந்த உமர் (ரலி ) அல்லாஹ்வின் தூதரே ! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தானே இருக்கிறோம் ?" எனக் கேட்டார்கள் .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் "ஆம் !எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தான் இருக்கிறீர்கள் " என்று கூறினார்கள் .அப்போது உமர் (ரலி )! "இனி நாம் ஏன் மறைவாக செயற்பட வேண்டும் ? இனி சத்தியத்தை வெளிப்படையாக கூறியே ஆகவேண்டும் " எனக் கூறியவராக இருந்த சொற்ப முஸ்லீம்களை இரண்டு அணியாக பிரித்து ஒரு அணிக்கு ஹம்சா (ரலி ) அவர்களை தலைமைதாங்க வைத்து மறு அணிக்கு தான் தலைமை தாங்கியவராக புழுதி பறக்க அணிநடை சென்று கவுபாவுக்குள் நுழைந்தார்கள் .(இதன் பின்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் எனப் பொருள் படும் ' அல் பாரூக் ' என்ற பெயரை உமர் (ரலி )க்கு சூட்டினார்கள் .) காபிர்கள் கதிகலங்கிப் போனார்கள் .

                          இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையில் தான் நிகழ்ந்தவை . இன்று காவி அணிந்த காழ்ப்புணர்ச்சிகள் குர் ஆணை மொழி பெயர்த்து எம்மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புகின்றன !? 'அபூலஹபை விமர்சித்த சூராவைக் காட்டி இப்படி பேசும் ஒருவனுக்கு இறைவனாக இருக்க தகுதி இல்லை என ஒரு தரக்குறைவு தம்பட்டம் அடிக்கிறது !!.அஹ்லாக் ,அஹ்லாக் என ஆதாரம் காட்டி இஸ்லாத்தை ஒரு மதமாக முன்வைத்து அதன் சித்தாந்தப் பெறுமானம் பேசப்படாத குறையே இந்த குறைமதிகள்   'வஹியை இழுத்து கேலித்தனம் செய்ய காரணமாக ஆகிவிட்டது!! 

                        இது   இஸ்லாத்தை சாகடித்து ஒரு சிறுபான்மை வாழ்வு எமக்கு அவசியமா ? என சிந்திக்க வேண்டிய தருணம் .ஓ முஸ்லீம் உம்மத்தே ! எம்மிடம் மட்டுமே ஒரு தெட்டத் தெளிவான வாழ்வியல் வழிமுறை உண்டு என்பதே எமது அசைக்க முடியாத அகீதா . யாரும் வெறுக்கும் நிலையிலும் மறுக்கும் நிலையிலும் கிண்டலடிக்கும் நிலையிலும் இந்த சத்தியமே வெற்றியடையும் என்பதும் எமது அகீதா . அல்லாஹ்வுடைய அருள் என்பது அவன் எங்களுக்கு தந்திருக்கும் வாழ்க்கை முறைதான் . 'வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு அல்லது இஸ்லாத்தோடு மரணித்தல் 'என்பது எமது முடிவாக மாறும் பட்சத்தில் இஸ்லாம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற எந்த நிலையிலும் கண்ணியத்தோடு  வாழும் என்பது வரலாறு மட்டுமல்ல நாம் எதிர் கொள்ளும் நிதர்சன நியாயமும் ஆகும் ..

இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்





இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம் 
إن الحكم إلا للهஅல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

Friday, February 22, 2013

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!


இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி!
o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!
o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!
"லோக்பால்" மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனும் உண்மையை எவரும் கண்டுகொள்ள முடியும்.
இஸ்லாத்தில் நீதிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தை அணுகி, எளிதில் சட்டப்படி தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண குடிமகன் கூட நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்! அதை கலீஃபாவும் குற்றமாக கருதியதில்லை. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில், பொன்னெழுத்துக்களில் பதிய வைத்துள்ள பல நிகழ்ச்சிகளை இன்றும் உலகம் வியந்து பாராட்டுகிறது.
இஸ்லாமிய ஆட்சியில் கலீஃபாக்களும், பேரர்சர்களும் கட்டிக்காத்த நீதித்துறை தன் கடமையை குறைவின்றி செயலாற்றி வந்தது. நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட்டு, குர்ஆனின் கட்டளைகளையும், சுன்னத் வழிமுறைகளையும் கவனத்துடன் பின்பற்றி தீர்ப்புகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்வது அவசியமில்லையா?!

o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி :
முதலாம் கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. கூஃபாவில் வசித்து வந்த "ஜமீலா" என்னும் பெண்ணை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "ஆஸிம்" என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தவிற்க முடியாத சில காரணங்களினால், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஜமீலா அவர்களை விவாகரத்து செய்து விட்டார்கள். அதன் பிறகு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மதீனா மாநகருக்கு குடியேறி விட்டார்கள். ஜமீலா அவர்கள் தன்னுடைய மகன் ஆஸிமுடன் கூஃபாவில் தங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கூஃபாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, எதேச்சையாக தன் மகன் ஆஸிமை அங்கு பார்க்க நேர்ந்தது. பாச மிகுதியால் தன் குழந்தையை வாரி அணைத்து தன் குதிரையின் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார்கள். தன்னுடைய குழந்தையை மதீனாவுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள்.
செய்தி அறிந்த ஜமீலா அவர்கள் ஓடோடி அங்கு வந்து, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எக்காரணத்தைக்கொண்டும் தன் குழந்தையை அனுப்புவதற்கு மறுத்ததுடன், தன் குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்கள். பாசப்பிணைப்பில் இருவரும் உறுதியாக இருந்ததால் வாக்குவாதம் முற்றி பிரச்சனை, அன்றைய கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றுவிட்டது.
குழந்தை ஆஸிமின் இளம் வயதினை கருத்தில் கொண்டு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக "குழந்தை அதன் தாயாருடன் தான் இருக்க வேண்டும்" என்று கலீஃபா அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். தீர்ப்பை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை :
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தின் கவர்னராக இருந்தார். கிறிஸ்தவர் ஒருவர், எகிப்தின் கவர்னரின் மகனுக்கு எதிராக, மதீனாவில் இருந்த அமீருல் முஃமினீன், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடர்ந்தார்.
"கவர்னருடைய மகன் சாட்டையினால் தன்னுடைய முதுகுத்தோல் உரியும் அளவுக்கு அடித்து துன்புறுத்தினார். நீதி கேட்டு தங்களிடம் முறையீடு செய்ய வந்துள்ளேன்" என்று அந்த கிறிஸ்தவர் முறையிட்டார்.
"உம்மை எதற்காக அவர் அடித்தார்?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, "எகிப்து நகரின் வெளியில் குதிரை சவாரி பந்தயம் நடந்தது. இதில் என்னுடைய குதிரை வேகமாக ஓடி கவர்னரின் மகன் சவாரி செய்த குதிரையை பின்னடையச்செய்து வெற்றி பெற்று விட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவர்னரின் மகன், என்னை சாட்டையினால் தாக்கினார்" என்று பதிலளித்த கிறிஸ்தவர், தன் சட்டையினைத்தூக்கி, காயம்பட்ட இடத்தைக் காட்டினார்.
இதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கோபத்துடன், "உமக்கு நீதி கிடைக்காதவரை, நான் வேறு எந்த வேலையையும் செய்யப்போவதில்லை" என்று உறுதியளித்தார்கள்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய பணியாளர், முஹம்ம்து பின் முஸல்லமாவிடம் அவசரக் கடிதம் கொடுத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதில், "எகிப்தின் கவர்னர், உடனடியாக மதீனாவுக்கு வரவேண்டும். ஒரு ஏழையின் உடலை கசையடியால் சல்லடையாக்கிய தங்கள் மகனையும் தங்களுடன் அழைத்து வரவும்" என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைத்ததும், எகிப்தின் கவர்னரும், அவருடைய மகனும் உடனடியாக மதீனா மாநகரம் வந்து கலீஃபா முன் ஆஜரானார்கள்.
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிறிஸ்தவரையும் அங்கு வரவழைத்து, மூவரையும் கூண்டில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். கலீஃபா அவர்கள், கிறிஸ்தவரை நோக்கி "நீங்கள் சுமத்தும் குற்றத்தை விளக்கமாகக் கூறவும்" என்று கூற உடனே அந்த கிறிஸ்தவர் குதிரை சவாரியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.
இதனைக் கேட்ட கவர்னரின் மகன் தலை தொங்கியபடியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியடைந்த கவர்னர் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய சாட்டையை எடுத்து ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீட்டியபடியே, "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடைய சாட்டையினால் என் மகனுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுங்கள்" என்று உணர்ச்சிபொங்க கேட்டுக்கொண்டார்.
அதற்கு கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமது சாட்டையைக் கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தால், எகிப்திலேயே தண்டனை வழங்கும்படி செய்திருப்பேன். இப்போது உமது சாட்டைக்கும் அவசியமில்லை, எனது கரங்களுக்கும் வேலையில்லை. எனது சாட்டை, கிறிஸ்தவரின் கரங்களில் இருக்கும். தண்டனை பெறும் உடல் உமது அருமை மகனுடையதாக இருக்கும்!" என்று சொல்லியபடியே, தன்னுடைய சாட்டையை கிறிஸ்தவரிடம் கொடுத்து "அடியுங்கள், உங்களை எப்படி அடித்தாரோ அதைப் போலவே அடியுங்கள். உங்களை எப்படி இழிவு படுத்தினாரோ, அதே விதமாக இன்று அவரை இழிவுபடுத்துங்கள்" என்று அமீருல் முஃமினீன் கட்டளையிட்டார்கள்.
பழியைத் தீர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட கிறிஸ்தவர், சாட்டையினை தன்னுடைய கையில் பிடித்தபடியே, கவர்னரின் முன் வந்து நின்று கொண்டு, "அவர் என்னை கசையால் அடிக்கும்போது, எனது முதுகில் துணி இன்றி, வெற்று உடம்போடு இருந்தேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட எகிப்தின் கவர்னர், உடனே தன் கைகளால், தன் மகனின் துணிகளை அகற்றினார். அதற்குப்பின்னரே அந்த கிறிஸ்தவர் தனது பழியைத் தீர்த்துக்கொண்டார்.
பழிக்குப்பழி தீர்த்துக்கொண்ட அந்த கிறிஸ்தவர், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைகள் கூட நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அமீருல் ம்ஃமினீன் அவர்களே! தாங்கள் யாரிடம், அடிமையாக இருந்து இந்த நீதியும் நேர்மையும் கொண்ட புனித பாடத்தை கற்றுக்கொண்டீர்களோ என்னையும் அவருடைய அடிமையாக சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று உணர்ச்சி பொங்க கத்தினார்! அடுத்த நிமிடமே, அந்த கிறிஸ்தவர் இஸ்லாத்தை தழுவி விட்டார்.

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி :
துருக்கி நாட்டின் சுல்தான்களில், சுல்தான் பாயஜித் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய ஆட்சியில் ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீதிபதி பதவியை கண்ணியத்துதுடன் அலங்கரித்து வந்தவர்கள். ஒருநாள், அவர் முன் வந்த வழக்கொன்றில் சுல்தான் பாயஜித் அவர்களே சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. சுல்தான் நீதிமன்றத்திற்கு ஆஜராகி சாட்சிசொல்ல முன்வந்தபோது அவரது சாட்சியத்தை நீதிபதி ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், "தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாதவருடைய சாட்சியம் அவ்வளவு வலுவானதக கருத முடியாது" என்பதுதான்! இதைக் கேட்டு, சுல்தான் பாயஜித் சிறிதும் கோபப்படவில்லை. நீதிபதி தன்னை அவமானப்படுத்தியதாகவும் கருதவில்லை. நீதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இஸ்லாமிய ஆட்சியில் நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாராகத்தான் இருந்திருக்கின்றன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வகுக்கப்பட்ட நீதிநெறிகள், இறையருளால் போற்றி, பாதுகாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக சரித்திரக்குறிப்புகளில் காணலாம்.

''ஏகத்துவ முழக்கம்''

பக்தாதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியிருக்கும் இடம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்''
[ o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை"யில் வெற்றி கிடையாது.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி & ஃபுதூஹுல் ஃகைப்")
''இந்த ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பதை அறிந்தும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவரும் ஆலிம்களும் மதரஸா மாணவர்களும்திருந்துவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. வழிகாட்ட வேண்டியவர்களே வழிகெட்டுப் போகும்போது அல்லாஹ்விடம் முறையிடுவதைத்தவிர வேறென்ன வழி?! ஏனெனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.'' -adm.]
  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி  
ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட சீர்த்திருத்தவதிக்களில் முக்கியமானவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஏகத்துவத்தை, தவ்ஹீதை உலகெங்கும் ஒளி பரப்பிய அவர்களின் போதனைகள் அத்தனையும் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வாயிலாகவும் இறைநம்பிக்கையை உறுதியுடன் மனதில் இருத்திக்கொள்ள உந்துதல் சக்தியாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஒளிவிளக்காகும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதியுள்ள "ஃபுதூஹுல் ஃகைப்" எனும் நூல் பல உபதேசங்களை அடங்கிய பெட்டகம் என்று சொல்லலாம்.
நாம் செயல்பட இறைவேதமாம் அல்குர் ஆனைத்தவிர வேறு நெறி நூல் ஏதுமில்லை. நாம் பின்பற்றிச்செல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தவிர வேறெந்த நபியுமில்லை. அவ்விரண்டையும் விட்டுவிட்டு வேறெங்கும் சென்றுவிடாதீர்கள். அதைவிட்டு அப்பாற்பட்டு சென்றுவிட்டால் நாசமடைந்து விடுவாய். ஷைத்தானும், மனோஇச்சையும் உன்னை வழிகெடுத்துவிடுவர்.
"அல்குர்ஆன், அல் ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸுக்கு ஒத்திருந்தால் அதனி எடுத்துக்கொள். இல்லையேல் அதனை தூக்கி எறிந்துவிடு. ஏனெனில், "இத்தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரொ அதை வாங்கிக் (எடுத்துக்) கொள்ளுங்கள். எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (அல்-குர்ஆன் 59 : 7) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸில்தான் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) பாதுகாப்பு இருக்கிறது. இவையிரண்டின் மூலமாகவே ஒரு மனிதன் இறைநேசராக ஆக முடியும்.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை" யில் வெற்றி கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லா ஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், கொடுத்தல்-கொடுக்க மறுத்தல், வாழ்வு-மரணம், மதிப்பு-இழிவு, செல்வம்-வறுமை, இவை யாவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டுமே உள்ளன. (இந்த விபரங்கள் அனைத்தும் அவர்கள் எழுதிய "ஃபுதூஹுல் ஃகைப்" நூலில் அடங்கியுள்ளன.
''அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
''உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான்.'' (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி)
"அல்லாஹ்வையே வணங்க வேண்டும். வணக்கங்கள் எதுவாயினும் அது அல்லாஹ்விற்கு மட்டுமே. அதில் யாரையும், எதனையும் இணையாக்கிவிடக் கூடாது. அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். துன்பம் - துயரம் ஏற்படும் சமயத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும். மற்றெல்லஓரையும் விட அல்லாஹ்வே மிக மிக நெருக்கமாக, சமீபமாக இருக்கிறான். அவனே செவிமடுப்பவன். துன்பங்களை நீக்குபவன். நாடியவுடன் எதனையும் செய்பவன். உதவிகள் அல்லாஹ்விடமே கோரப்பட வேண்டும்..." என உபதேசம் செய்த இந்த இறைநேசரை முஸ்லிம்களில் ஒரு சாரார் அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி வைத்து, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய உதவிகளை இவர்களிடம் கேட்கக்கூடிய மோசமான நிலை இன்றும் தொடர்கிறது.
அல்லாஹ்விற்கு மட்டுமே "நேர்ச்சை" எனும் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், சிலர் இவர்களின் பெநேர்ச்சையும் செய்கின்றனர்.
"ஜியாரத்" எனும் பெயரில் இவர்களின் மண்ணறையை (தவாஃப்) சுற்றி வருவது, அங்கே (இஃதிகாஃப்) தங்குவது போன்ற அனாச்சாரங்களை செய்து வருகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இது அவர்களின் உபதேசத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 27 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார்கள். அவர்களில் 5 ஆண் பிள்ளைகளும் 22 பெண் குழந்தைகளும் அடங்குவர். இது அவர்கள் இல்லறத்தை இனிதாக அமைத்து வாழ்ந்ததற்கு உண்மையான சாட்சியாகும்.
தன்னுடைய கடைசி காலம் வரைகல்வியை போதிக்கும் ஆசானாகவே பணியாற்றினார்கள். இறுதியில் பாக்தாதிலேயே மரணமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மண்ணறையை சுவனப்பூங்காவாக ஆக்கிவைப்பானாக. இவர்கள் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ வரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-மவ்லவி, F. ஜமால் பாகவி

Wednesday, February 20, 2013

சிலுவைப்போர் ஸ்டில் இஸ்லாம் PART -1



சிலுவை என்ன?

அவர்கள் நம்பிக்கை உத்தியோகபூர்வ தேவாலயத்தின் என்று வேறுபட்டன ஏனெனில் சிலுவை heretics எதிராக அல்லது வேறு வார்த்தைகளில், முஸ்லிம்கள் மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபை மூலம் நடுத்தர வயது போது போராடியது. முதல் சிலுவை 1095 இல் போப் Orban இரண்டாவது தொடங்கப்பட்டது. இந்த கிரிஸ்துவர் தேவாலயத்தின் நீண்ட மற்றும் மிக பெரிய சிலுவைப்போர் மற்றும் 200 ஆண்டுகளில், இது முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியம் எதிராக மத்திய கிழக்கு நடைபெற்றது நீடித்தது. வெளிப்படையான நோக்கம் கிரிஸ்துவர் வணங்கப்படும் மற்றும் அவர்களுக்கு யாத்திரை ஒரு இடம் இருந்தது, அது பாலஸ்தீன புனித நிலத்தை எடுத்து இருந்தது. போப் நில இன்ஃபிடல்ஸ் ', அவர்கள் முஸ்லிம்கள் என்று இது கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் உள்ளார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை இராணுவ பயம் மற்றும் இஸ்லாமியம் இறுதியில் ஐரோப்பா நுழைய என்று திகில் காரணமாக எப்போதும் விரிவடைந்து இஸ்லாமிய மாநிலம், தாக்க இருந்தது. ஏற்கனவே வியன்னா மற்றும் பிரான்ஸ் வாயில்கள் அடைந்தது, அதனால் சர்ச் தவிர்க்க முடியாமல் அச்சுறுத்தல் உணர்ந்தேன்.

சிலுவைப்போர் காய்ச்சல்

இடைக்காலத்தில் ஐரோப்பா போது முடியாட்சி, மத குருமார்கள் மற்றும் 'குதிரைகள்' கட்டுப்படுத்தப்படும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தின் இருந்தது. இந்த நேரத்தில் ஐரோப்பாவில் தேவாலயத்தில் upmost அதிகாரம் கொண்ட, தேவாலயத்தில் தலைவர் என்ற போப் மிகவும் சக்தி இருந்தது, அதனால் அவர் சமூகத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது. தேவாலயத்தின் ஆசை பகுதியாக அதன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அங்கு சிலுவை. மத்திய கிழக்கில் இஸ்லாமியம் அழிக்க அழைப்பு நேரத்தில், போப் பைசண்டைன் பேரரசு (கிரேக்கம் மரபுவழி திருச்சபை கட்டுப்படுத்தப்படும்) ரோம் இருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக உதவி கோரி அந்த தேவாலயத்தில் அரசியல் நலன்களை மேலும் முடியும் என்று. சிலுவை அங்கு போராடிய வெற்றி பெற்றது என்றால், அது சர்ச் அரசியல் அதிகாரம் மற்றும் புவியியல் விரிவாக்கம் என்ன என்று.


ஐரோப்பா முழுவதும் "சிலுவைப்போர் ஃபீவர்" மூலம் உறைந்திருந்தது. இராணுவ துணிகர தேவாலயத்தில் வரையப்பட்டது இருந்த இஸ்லாமியம் பற்றிய கூறப்படும் பேய் மற்றும் அறியாமை முகத்தை எதிராக கிறித்துவம் உண்மையை இடையே மோதல் கருதப்பட்டது. இந்த பிரச்சாரம் குர்ஆன் நம்பகத்தன்மையை மற்றும் நபி இரண்டு குறித்துள்ளார் போலிகளிலும் இருந்த முஹம்மது (SAWW), sorcerery, சாத்தான்கள், தீய, மற்றும் பேகன் தாக்கி கொண்டுள்ளது. மேலும், நபி (SAWW) பாலியல் வரைமுறையற்ற மற்றும் கீழ்த்தரமான, ஒரு குடிகாரன், சூதாட்டக்காரர் மற்றும் pimp கருதப்பட்டது. இந்த கேடுகெட்ட புனைதல் இருந்து, சர்ச் ஆனால் தங்கள் அழகை உள்ள, அனைத்து முஸ்லிம்கள் தங்கள் நடத்தையில் மிருகங்கள் போல தான் மட்டும் அங்கு அளவிற்கு, despotic மற்றும் தீய என்று முடித்தார். எனவே மோசம் இந்த குற்றச்சாட்டுகள் இருந்தன, இன்னும் அவர்கள் அன்றியும் மற்றும் மக்கள் வரை lapped இருந்தது, மற்றும் முஸ்லீம் உலகில் தாக்குதல் நியாயம் சேர்க்கப்பட்டது. இந்த அடிப்படையில், குறிப்பாக ஓரியண்டலிஸம் அதன் வளர்ச்சி இருந்து மேற்கு மூலம் இஸ்லாமியம் நீண்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதல், வேர்கள் மாறியது. ஆண்டுகள் கழித்து, சிலுவை பெரும் romanticisation, Chateaulri பொருள் மற்றும் பற்றி எழுத போது சிலுவை எப்படி

"சக்தி அவை தெரியும் மட்டும் இருந்து முஸ்லிம்கள் விடுவிக்க ஒளிமயமான கிரிஸ்துவர் முயற்சி."

இந்த மாறாக முஸ்லிம்கள் விட அறப்போரில் ஒரு படம் முரண்பாடாக துல்லியமாக உள்ளது.

இது திருச்சபை காரணம் ஆதரவை நிதி மற்றும் வலிந்து இழு போதுமான இருந்தது இஸ்லாமியம் மற்றும் முஸ்லிம்கள் மேல் மற்றும் ஒத்த சித்திரங்கள் பயன்படுத்தி பெற்றது என்று மத வெறி; தேவாலய கொஞ்சம் போர் தேவை என்று இராணுவ பெறுவதற்கான கவலை சிலுவை. மேலும் இந்த வெற்றிகரமாக ஒரு பொது எதிரிக்கு எதிராக அணிதிரண்டு ஐரோப்பிய நாடுகளில் மேலும் கிரிஸ்துவர் நிலையை வலுப்படுத்தும் போது வரலாற்றில் முதல் முறை ஒன்று. சர்ச் தான் நித்திய சொர்க்கத்தில் மற்றும் இறப்பு சத்தியம், மற்றும் 'காட்டுமிராண்டி' முஸ்லிம்களின் seething, குருட்டு வெறுப்பு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து இருந்து குறிப்பாக ஐரோப்பா விட்டு குதிரைகள் மற்றும் விவசாயிகள் ஒரு வெகுஜன வெளியேற்றம், வெற்றி மற்றும் இரக்கமின்றி முஸ்லிம்கள் கொலை மற்றும் ஜெருசலேம் செல்ல இயக்கப்படுகிறது .


Tuesday, February 19, 2013

செயற்கை மூளையை உருவாக்க முடியுமா?

artificial_brain_370_copy
தொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்; மற்றவை மடிந்து போகும். நாளடைவில் பிழைத்தவற்றை நோக்கினால், யாரோ அவற்றை அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் உருவாக்கி உள்ளார் என்பது போல் தோன்றும். அப்படி இயற்கை தேர்வு-முறையில் உருவான எந்திரங்கள் தான் பாக்டீரியா, தாவரங்கள், மீன்கள் முதல் விலங்குகள் வரை, மனிதன் உட்பட! இந்த எந்திரங்களின் வடிவமைப்பு அவற்றின் ஜீன்களில் (DNA) உள்ளது.
உயிர் எந்திரங்களின் அடிப்படை நோக்கம் பிழைத்திருந்து, இனப்பெருக்கம் செய்தல். ஏனெனில், அப்படிப்பட்டவை மட்டுமே பிழைத்திருக்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு அங்கங்களும், மூளையின் ஒவ்வொரு எண்ணங்களும், வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளும் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து உருவாக்கப்பட்டதே!
நாம் பிழைத்திருக்க உணவு வேண்டும்; அதைத் தேட கால்கள் வேண்டும்; பறித்து, பிடித்து உண்ண கைகள் வேண்டும்; உணவை கண்டுகொள்ள கண்களும், மூக்கும் வேண்டும்; உண்பதற்கு வாய் வேண்டும். இந்த உடல் உறுப்புகளின் தசைகளைக் கட்டுபடுத்தி செயல்படுத்த நரம்பு மண்டலமும், மூளையும் வேண்டும்.
உடலுக்குத் தேவையான நீர் முற்றிலும் குறைவதற்கு முன்பே மூளை நமக்கு தாகத்தை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும்; இரத்தத்தில் ஊட்டச்சத்து குறையும் முன்பே பசியை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும். உடல் செல்கள் அதிகமாக வெப்பத்தால் சேதமடையும் முன், வியர்வையை உருவாக்கி உடல் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். உடல் செல்கள் குளிரால் சேதமடையும் முன், உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி உடல் வெப்பத்தைக் கூட்ட வேண்டும். இனப்பெருக்கம் செய்ய பால் எண்ணங்களை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப உடலைத் தயார்படுத்த வேண்டும்.
மூளை நம் கால்களுக்கு சமமான அளவிற்கு (25%) ஆற்றலை செலவிடுகின்றது. எனவே அது பொதுவாக சாதாரண வேகத்தில் இயங்க வேண்டும். ஆனால் ஆபத்து போன்ற முக்கிய சமயங்களில் மூளை இயங்கும் வேகத்தைக் கூட்ட வேண்டும். மூளை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் லாப நட்டங்களையும் அறிந்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் எதிரியுடன் போராட முடிவெடுத்த பிறகு, மூளை சீர்தூக்கிப் பார்த்தல் பகுதியை அணைத்து விட்டு, மூளையின் ஆற்றலையும் உடலையும் போராட்டத்திற்கு ஒரு முகப்படுத்தி தயார்படுத்த வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை (மன-நிலை; கால்கள் செயல்பட்டால் நடத்தல், மூளை செயல்பட்டால் மனம்) கோபம் என்கின்றோம். எனவேதான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிறோம்.
ஒவ்வொன்றின் குறை நிறைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் பால்-துணையின் மேல், மூளை அப்பகுதியின் செயலை அணைத்து விட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை காதல் என்கின்றோம். எனவே தான்-காதலுக்கு கண் இல்லை-என்கின்றோம். எனவே தான் காதலின் போது குறைகள் அற்ற சொர்க்கமாக இவ்வுலகைக் காண்கின்றோம். பொதுவாக மூளை பல விடயங்களை அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆகவே சாதாரணமாக மனம் அலைபாய்தல் எளிது. ஆனால் நம் குழந்தைகளின் மேல், நம் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நல்லது கெட்டதை அறிந்து அதற்கேற்ப ஆற்றலை செலவிட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை பாசம் என்கின்றோம்.
மூளை அனுபவத்தில் ஏற்படும் புதிய நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும்; புதிய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்; புதிய திறமைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள உணர்ச்சிகளை புதிய கற்றலின் மூலம், மூளை கட்டுப்படுத்த வேண்டும். மூளை இப்படி பலவற்றை செயல்படுத்துவதோடு, அதன் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்; தனக்கு என்ன தெரியும், தெரியாது, தன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்; இதை நாம் சுயநினைவு என்கின்றோம். இவ்வாறு ஜீன்கள் நம் மூளையில் எழுதிய கட்டளையை செயல்படுத்துகின்றோம். இது நம் எந்திர வாழ்கை! இந்த எந்திரம் செயல்படும்போது உயிர் என்கின்றோம், அது செயல் இழக்கும்போது மரணம் என்கின்றோம்.
இப்பொழுதெல்லாம் சுவாசம் நின்ற பிறகும், இருதயம் நின்ற பிறகும் கூட உயிர் பிழைக்க வைக்க முடிகின்றதே?
பாக்டீரியா என்பது ஒரு செல் உயிரினம். அதன் செல்லின் எந்த பகுதி பழுதடைந்தாலும் அல்லது எந்த வேதிவினை தடைபட்டாலும் அது அதன் மரணம். நாம் பல-செல் உயிரினம். நாம் பல கோடி செல்களின் கூட்டு முயற்சி. அதில் ஒரு செல் பழுதடைந்தால், நம் உடல் அதை மாற்றிவிடும். ஆனால் ஒரு முக்கிய உறுப்பே பழுதடைந்தால், அது மற்ற செல்களையும் சேதப்படுத்தி மொத்த உடலும் மெதுவாக செயலிழந்து போகும். சுவாசமோ, இருதயமோ நின்ற பிறகு, நம் உடல் செல்கள் மெதுவாக பழுதடைய ஆரம்பிக்கும். அதற்கு முன், செயற்கையாக சுவாசத்தை, இருதயத்தை இயக்கப்படுத்தினால், நாம் மீண்டு வரலாம். இன்றைய மருத்துவ தொழிற்நுட்பத்தில், பெரும்பான்மையான மூளையின் செல்கள் செயல் இழந்தால் அதை மரணம் எனலாம். ஏனெனில் மற்றவற்றிக்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளோம். நாளை மூளைக்கு மாற்று வழி கண்டறியலாம்.
ஒரு கருதுகோள், உன் கை கால்களை இழந்து நீ செயற்கை அங்கங்களைப் பொருத்தி கொண்டால், அது நீதானா? (மூளையின் கட்டளைகளை மின்னனு செய்திகளாக மாற்றி அதைக் கொண்டு செயற்கை அங்கங்களை இயங்க வைப்பது. இதில் பல தொழிற்நுட்ப இயற்பாடுகள் இருந்தாலும் கை, கால்கள், காது, கண்கள் போன்றவற்றை ஓரளவு செயற்கையாக மாற்றி உள்ளோம்)
அப்பொழுதும் அது நான் தான்.
மூளையின் செல்கள் தொடர்ந்து செயல்பட நல்ல இரத்தத்தை தொடர்ந்து அனுப்ப வேண்டும். இருதயம் நுரையீரல் என உன் உடலின் அனைத்து உறுப்புகளையும் நீக்கிவிட்டு செயற்கையாக மூளை நல்ல இரத்தம் கிடைக்கும்படி செய்தால், அப்பொழுதும் அது நீயா?
நான் தான்.
மூளையில் உள்ள செல்கள் (நரம்பணுக்கள்) எப்படி செயல்படுகின்றது என்பது நமக்குத் தெரியும். ஒரு செல்லை அல்லது பல செல்களை மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைக்க முடியும். (இதை எலி மற்றும் குரங்கின் மூளை செல்களுக்கு ஏற்கனவே நாம் செய்துள்ளோம்). இப்படி உன்னுடைய ஒவ்வொரு செல்லையும் மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைத்தால், நீ எப்படி செயல்படுகின்றாயோ அதே போலவே செயல்படுவாய். அப்பொழுதும் அது நீயா?
ம்ம்ம், நான் தான் என்று நினைக்கின்றேன்!
இப்பொழுது உனக்கு மின்சக்தி தரும் பேட்டரி மட்டும் இருந்தால் போதும். நாம் உருவாக்கும் எந்திரங்கள் உயிரினங்களைப் போல் செயல்படுவதில்லையே?
உயிரினங்கள் மிகவும் சிக்கலான நேனோ-தொழிற்நுட்பத்தில் (அணு மற்றும் வேதி-மூலக்கூறுகள் அளவில்) உருவாக்கப்பட்டவை. இப்பொழுது தான் நாம் நேனோ-தொழிற்நுட்பத்தில் கால் வைத்துள்ளோம். ஆனாலும் மற்ற தொழிற்நுட்பத்திலும் பல நல்ல தீர்வுகள காண முடியும். ஒவ்வொரு முறையிலும் நிறை குறைகள் உண்டு. விலங்குகள் எலும்புகளையும், ஆயிரக்கணக்கான நரம்பு மற்றும் தசைகளையும் கொண்டு உருவான கால்கள் மூலம் இடம் பெயர்கின்றன. நாம் செயற்கை எந்திரங்களுக்கு (கார் வண்டிகள்) சக்கரங்களைப் பயன்படுத்துகின்றோம். பறவையைப் போல் விமானத்தையும், மேலும் முற்றிலும் வேறுபட்ட முறையிலும் இயங்கும் இராக்கெட்டையும் உருவாக்கி உள்ளோம். மூளையைப் போல் கணினியை உருவாக்கியுள்ளோம். இன்று செயற்கை-அறிவில் உருவாக்கப்பட்ட கணினி-மென்நிரல்கள் செஸ் விளையாடுகின்றன, பலவகையான கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றன, பல துறைகளிலில் (மண்ணியல், இருதயவியல்,..) நிபுணர்களைப் போல் ஆலோசனை வழங்குகின்றன, பங்கு சந்தையில் பங்குகளை வாங்குகின்றன.
இன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட செயற்கை-அறிவு-மென்நிரல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆயிரக்கணக்கான செய்திகளைக் கொண்டவை. ஆனால் மனிதனைப் போன்ற பொது-அறிவுக்கு ஒன்றுக்கொன்று-தொடர்புடைய பல கோடி செய்திகளைக் கொண்ட மென்நிரல்களை உருவாக்க வேண்டும். அதை நேரடியாக உருவாக்குவதற்குப் பதில், குழந்தைகள் உலகத் தொடர்பு மற்றும் அனுபவத்தின் மூலம் கற்பது போல் கற்கும்-மென்நிரல்களை உருவாக்கலாம். மனிதனைப் போன்ற தானியங்கு-எந்திரத்தை உருவாக்கினால் அதற்கும் சுயநினைவு மற்றும் ஒருவகையான உணர்ச்சிகள் இருக்கும்.
எப்படி?
அது அதை எப்படிப்பட்ட கட்டமைப்பு, கற்கும் உத்திகளைக் கொண்டு எந்த நோக்கத்திற்காக உருவாக்குகின்றோம் என்பதைப் பொருத்தது. குறைந்த பட்சம் அதற்கு அதனுடைய சக்தி மூலத்தை (மின்சக்தி வழங்கும் பேட்டரி) பற்றி ஒரளவாவது தெரிய வேண்டும்-அதிகபட்ச சேமிக்கும் சக்தி எவ்வளவு? ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு சக்தி தேவைப்படும்? இன்னும் எவ்வளவு நேரம் சக்தி இருக்கும்? எப்படிப்பட்ட வழிகளில் சக்தியைப் பெறமுடியும்? அதன் அங்கங்களைப் பற்றியும், அதைக் கொண்டு என்ன என்ன செய்ய முடியும் என்பதையும் அறிய வேண்டும். மேலும் உலகத்தைப் பற்றியும் அதன் காரண-காரியங்களைப் பற்றியும் கற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு அதன் கற்கும் திறனைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு தனக்கு என்ன தெரியும்–தெரியாது, என்ன திறமைகள் இருக்கு–இல்லை என்பது தெரிய வேண்டும். மொத்தத்தில் சுய அறிவு, சுய நினைவு வேண்டும். அதற்கு சுய–அறிவு இருந்தால், அதன் மூளையின் ஒவ்வொரு நிலையைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு நிலையும் அதன் உணர்ச்சிகளே!
ஒரு இலக்கை அடைய அது திட்டமிட வேண்டும். நிஜ உலக இலக்குகள் செஸ்– விளையாட்டை விட பலகோடி மடங்கு சிக்கலானவை. பல வழிகளிலிருந்து அதன் நன்மை–தீமைகள் அறிந்து தன்னுடைய பலம்–பலவீனம் அறிந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; தெரியாதவற்றை பல வழிகளில் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துணை–இலக்குகள் வெற்றி–தோல்வி அடையும்போது, அதை அறிந்து கற்றுக் கொள்ளும் நிலை ஒருவகையில் சந்தோசம்–விரக்தியைப் போன்றது தான். புதியவற்றவை கற்கும்போதும் ஏற்படும் நிலை, புரியாதவற்றால் குழம்பி அதைப் புரிந்து கொள்ள முற்படும் நிலை என பலவாறு அதன் நிலைகள் விரிவடையும்.
நாம் உருவாக்கும் செயற்கை எந்திரங்கள் நம்மைவிட மேம்பட்டதாக இருக்கும் அல்லவா?
செயற்கை எந்திரங்களின் மூளை அளவையும் வேகத்தையும் பலமடங்கு அதிகப்படுத்தலாம். தற்காலிக நினைவையும், சுய–அறிவையும் பல மடங்கு உயர்த்தி அதன் அறிவுத்திறனை பல மடங்கு உயர்த்தலாம். அப்படிப்பட்ட எந்திரங்கள் நாளை நம்முடன் வலம்வரலாம்! அவை புற்றுநோய், HIV போன்ற நோய்களுக்கு மருந்து கண்டறியலாம், நாட்டின் உலகத்தின் பொருளாதார பிரச்சினைகளுக்கு, உலக வெப்பமயமாக்குதலுக்கு நல்ல தீர்வு காணலாம். அப்படிப்பட்ட எந்திரம் அதைவிட மேம்பட்ட எந்திரத்தை உருவாக்கலாம்! யார் கண்டார், நாம் நம் சந்ததிகளை ஜீன்கள் மூலமாக அனுப்புவதற்குப் பதிலாக நாமே நம் மூளையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்!

அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்




வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றி(!!!)யைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது.இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.]
   அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்    
9/2/2013 அன்று மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள் இல்லையா? (கட்டுரையின் ஆங்கில மூலம் 10/2/2013 அன்று எழுதப்பட்டது). தில்லியில் இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. கதிரவன் உதித்தவுடன் சட்டமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 2011 நாடாளுமன்றத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குரு காலைச் சிற்றுண்டிக்கு சற்று முன்பாக, கமுக்கமாகத் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. ஒருவேளை மக்பூல் பட் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அப்சல் குரு புதைக்கப்பட்டிருப்பாரோ? (மக்பூல் பட் காசுமீரைச் சேர்ந்தவர். 1984இல் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர். 11/2/2013 அன்று காசுமீர் மக்கள் அவரது நினைவு தினத்தை அனுசரிக்க இருக்கிறார்கள்).
அப்சல் குருவைத் தூக்கிலிடப் போவது அவரது மனைவிக்கோ மகனுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. "அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை அப்சல் குருவின் குடும்பத்திற்கு பதிவஞ்சல்(Registered post) மூலமாகவும் விரைவு அஞ்சல்(speed post) மூலமாகவும் அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள். அஞ்சல் சென்று சேர்ந்ததா இல்லையா என்று உறுதி செய்யுமாறு சம்மு காசுமீர் காவல்துறைத் தலைவருக்கு(DGP) உத்தரவிடப்பட்டுள்ளது" என்று உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதைப் பற்றி யாருக்குக் கவலை? கேவலம் அவர்கள் ஒரு தீவிரவாதியின் குடும்பத்தினர் தானே.
வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றியைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.
உண்மை என்ன?
2001 திசம்பர் 13 அன்று ஆயுதம் தாங்கிய ஐவர் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் மகிழுந்தில் வாயில் வழியாக பாரளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களிடம் உயர்தர வெடிகருவிகள் இருந்தன. அவர்கள் பாதுகாப்புப்படை வீரர்களால் எதிர்கொள்ளப்பட்ட போது, துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். அவர்கள் எட்டு பாதுகாப்புப் படை வீரர்களையும் ஒரு தோட்டக்காரரையும் கொன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவரும் கொல்லப்பட்டனர். காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அப்சல் குரு பல வாக்குமூலங்கள் அளித்திருந்தார். அதில் ஒன்றில் தாக்குதல் நடத்திய ஐவரின் பெயர்களாக முகம்மது, இராணா, இராஜா, ஹம்சா, ஹெய்டர் எனும் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை அந்த ஐவரைப் பற்றி நமக்குத் தெரிந்த ஒரே தகவல் இதுதான்!
உள்துறை அமைச்சாராக இருந்த அத்வானி அவர்கள் ஐவரும் பாகிசுதானியர்களைப் போல் தோற்றமளித்ததாகக் கூறினார். ஒரு சிந்தியான அவருக்கு பாகிசுதானியர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்கக்கூடும் இல்லையா? அப்சலின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அரசு தனது தூதரை பாகிசுதானிலிருந்து திரும்ப அழைத்தது. ஐந்து இலட்சம் வீரர்களை பாகிசுதான் எல்லைக்கு அனுப்பியது இந்தியா. அணுஆயுதப் போர் மூளக் கூடும் என்றெல்லாம் பேச்சுகள் வந்தன. வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் அலுவலர்களுக்குப் பயண அறிவுரைகளையெல்லாம் கூறி தில்லியிலிருந்து வெளியேற்றின. ஆறு மாதங்கள் வரை நீடித்த இந்நிலையால் இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவாயின. ஆனால் இவ்வளவிற்கும் அடிப்படையான அப்சலின் வாக்குமூலத்தை விசாரணையின் தவறுகளையும், விதிமுறை மீறல்களையும் காரணம் காட்டி, பின்னர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
திசம்பர் 14 அன்று தில்லி சிறப்பு காவல் குழு இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக அறிவித்தது. திசம்பர் 15 அன்று, இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர் கிலானி தில்லியிலும், சௌகத் குருவும், அப்சல் குருவும் சிறீநகரிலுள்ள பழச்சந்தையிலும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து சௌகத்தின் மனைவியான அப்சன் குருவையும் கைது செய்தனர். ஊடகங்கள் வெகு ஆர்வமாக சிறப்புக் காவல் குழுவின் கூற்றுகளை வெளியிட்டன. "தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் தீவிரவாதத் திட்டங்களின் மையம்", "பல்கலைக்கழக தாதா ஃபிதாயீனை வழிநடத்தினார்", "தாத ஓய்வு நேரங்களில் தீவிரவாதம் பற்றி வகுப்பெடுத்தார்", என்பவை அப்போது வெளிவந்த தலைப்புச் செய்திகளில் சிலவாகும். ஜீ(Zee TV) காட்சி உண்மை நிகழ்ச்சிகளை சோடித்து எடுத்த "திசம்பர் 13" என்ற குறும்படத்தை ஒளிபரப்பியது.
இந்நிகழ்ச்சி காவல்துறையின் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. (காவல் துறையின் கூற்று உண்மையாக இருந்தால் நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன?).தலைமை அமைச்சர் வாஜ்பாயும், எல்.கே.அத்வானியும் இப்படத்தைப் பாராட்டினர். ஊடங்கள் நீதிபதிகளின் தீர்ப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி உச்சநீதிமன்றம் இப்படத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. விரைவு நீதிமன்றத்தில் அப்சல், சௌகத், கிலானி ஆகிய மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதற்கு சில நாட்கள் முன்புதான் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர்.கிலானி, அப்சன் குரு ஆகியோரை உயர் நீதிமன்றம் பின்னர் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஆனால் ஆகஸ்டு 5, 2005 அன்று அளித்த தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் முகம்மது அப்சலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளையும் இரட்டை மரண தண்டனையும் விதித்தது.
"அப்சல் குரு திசம்பர் 13,2001 அன்று நாடாளுமன்றத்தை அதிர வைத்த தீவிரவாதிகளில் ஒருவனில்லை. பாதுகாப்புப் படை வீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரில் மூவரைக் கொலை செய்த ஒருவனுமில்லை". இது பாசக மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மிசுரா, அக்டோபர் 7,2006ல் வெளிவந்த "தி பயோனியர்" இதழுக்கு அளித்த பேட்டியாகும். இக்கூற்று பல மூத்த இதழியல் நிருபர்கள் கூறிய பொய்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. உண்மை அந்நிருபர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். காவல் துறையின் குற்றப்பத்திரிக்கை கூட அத்தகைய நேரடி குற்றச்சாட்டை அப்சல் குரு மீது வைக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் "சாட்சியங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலானவை. குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான நேரடி சாட்சியங்கள் எவையும் இல்லை." என்று கூறிவிட்டு, மேலும் "ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய, பல உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த இயலும்" என்று கூறியது.
பாராளுமன்றத் தாக்குதல் குறித்த நமது கூட்டு மனசாட்சியை வடிவமைத்தவை எவை? நாம் செய்தித்தாள்களின் மூலம் அறிந்துகொண்ட தகவல்களா? தொலைக்காட்சியில் நாம் பார்த்த குறும்படங்களா?
நீதிமன்றம் எசு.ஏ.ஆர் கிலானியை விடுதலை செய்தது; ஆனால் அப்சலுக்குத் தண்டனை விதித்தது. இதிலிருந்தே இவ்வழக்கு நடுநிலையாக நடைபெற்றிருக்கிறது என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கக்கூடும் இல்லையா? அதையும் பார்க்கலாம்.
இவ்வழக்கின் விசாரணை மே 2002இல் விரைவு நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது உலகம் 9/11 தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து வெளிவரவில்லை. அமெரிக்க அரசோ ஆப்கானிசுதானில் பெற்ற வெற்றியில் சிறுபிள்ளைத்தனமாக அகமகிழ்ந்து கொண்டிருந்தது. குசராத்தில் அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருந்தது. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ சட்டம் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தது. இந்தக் குற்ற வழக்கின் மிக முக்கியமான கட்டத்தில், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போதும் அடிப்படை வாதங்கள் வைக்கப்பட்டபோதும், சட்ட விதிகளின் அடிப்படையில் வாதிடலாம். ஆனால் புதிய ஆதாரங்களைச் சேர்க்க முடியாது எனும் நிலையே இருந்தது.
மிகப் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குருவிற்கு வாதாட வழக்கறிஞர் கூட இல்லை. நீதிமன்றம் அமர்த்திய இளநிலை வழக்குரைஞரோ அப்சல் குருவை ஒரு முறை கூட சிறையில் சென்று சந்திக்கவில்லை. அப்சலுக்கு ஆதவாக ஒரு சாட்சியத்தைக் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எதிர்த்தரப்பின் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை கூட செய்யவில்லை. நீதிபதி இந்த விவகாரத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கிலுள்ள ஏராளமான குளறுபடிகளில் சிலவற்றைக் கீழே காணலாம்:
காவல்துறை கிலானியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயெ அப்சலைப் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறியது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அப்சலைக் கைது செய்யும் உத்தரவு கிலானியைப் பிடிக்கும் முன்பே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. நீதிமன்றம் இதை ஆவண முரண் என்று கூறியது. ஆனால் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது.
அப்சல் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசியும் மடிக்கணிணியும் மிக முக்கிய ஆவணங்களாகும். கைது ஆணை பிறப்பித்த பிசுமில்லா, கிலானியின் சகோதரராவார். பிடியாணை பிறப்பித்தவர்கள் சம்மு காசுமீரைச் சேர்ந்த காவல்துறையினர் இருவராவர். இருவரில் ஒருவர், அப்சல் போராளியாக இருந்து சரணடைந்த போது அவரைத் துன்புறுத்தியவராவார். கைப்பற்றப்பட்ட கணிணியும் செல்பேசியும் முத்திரை(சீல்) வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
மடிக்கணிணியின் வன்வட்டை(hard disc) கைதுக்குப் பிறகு யாரோ பயன்படுத்தி இருப்பது வழக்கு விசாரணையின் போது தெரிய வந்தது. அந்த வன்வட்டில் உள்துறையின் போலியான அனுமதிச் சீட்டுகளும், தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தினுள் நுழையப் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகளுமே இருந்தன. மேலும் ஜீ தொலைக்காட்சியின் பாராளுமன்ற காணொளியும் இருந்தது. காவல் துறையின் கூற்றுப்படி "அப்சல் பல தகவல்களை அழித்துவிட்டான். ஆனால் குற்றத்தை மெய்ப்பிக்கும் சில முக்கிய தகவல்களை அழிக்காமல் மடிக்கணியை காசி பாபாவிடம் ஒப்படைக்க அப்சல் விரைந்து கொண்டிருந்தான்". காவல் துறை குற்றப்பத்திரிக்கையின் படி இந்த காசி பாபாதான் தாக்குதலின் தலைவர்.கமல் கிசோர் என்ற சாட்சி அப்சலை அடையாளம் கண்டு கொண்டதுடன், தீவிரவாதிகள் திசம்பர் 4 2001 அன்று ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய சிம் கார்டை அப்சலுக்கு விற்றதாகவும் கூறினார். ஆனால் வழக்கு விசாரணையின் போது செல்பேசி அழைப்புப் பதிவுகள் சிம் கார்டுகள் நவம்பர் 6, 2001லிருந்தே பயன்பாட்டிலிருந்ததைத் தெரிவிக்கின்றன.
இப்படியாக சோடிக்கப்பட்ட ஆவணங்களும் பொய்களும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. நீதிமன்றம் இவை அனைத்தையும் கவனித்தது. ஆனால் காவல்துறையை இலேசாகக் கடிந்து கொண்டதுடன் விட்டுவிட்டது.
வழக்கமாக கசுமீரில் சரணடையும் போரளிகளைப் போலவே அப்சலும் இரையாகிப் போனார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார், கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். நடந்த சதித் திட்டங்களின் முன் அவர் ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொணர விரும்பும் எவருக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் யாருமே உண்மையைக் கண்டறிய விரும்பவில்லை. சதியின் மூல காரணகர்த்தாக்கள் கண்டறியப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை.
ஆனால் அப்சல் தூக்கிலிடப்பட்டுவிட்டார். இப்போது நமது கூட்டு மனசாட்சி திருப்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லை நமது கோப்பையில் பாதி இரத்தம்தான் நிரம்பியிருக்கிறதா?
தமிழாக்கம் – வி.நரேந்திரன்
ஆங்கில மூலம்:
http://www.thehindu.com/opinion/lead/a-perfect-day-for-democracy/article4397705.ece

Monday, February 18, 2013

ஆபத்தான குண்டுவெடிப்பு தொடர் ஈராக் தலைநகர் வெற்றி



கார் குண்டுகள் ஒரு தொடர் குறைந்தது 36 பேர் மற்றும் பாக்தாத்தின் ஷியா முஸ்லீம் பகுதிகளில் மற்றவர்களை காயமடைந்த டஜன் கணக்கான கொலை, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஞாயிறன்று தாக்குதல்கள், உள்ளூர் வேலை வார தொடக்கத்தில், பெரும்பாலும் வெளிப்புற சந்தைகளில் இலக்கு. அதிகாரிகள் குண்டுவெடிப்பு அனைத்து கார் குண்டுகள் ஏற்படும் என்று கூறினார்.

சதர் சிட்டி பரந்த ஷியா மாவட்டத்தில் வெடி நிரப்பிக்கொள்ள ஒரு கார் வெடிக்க ஞாயிறு காலை தாமதமாக தாக்குதல்கள் தொடக்கத்தில் கட்டியங். இன்னும் இரண்டு நிறுத்தப்படும் கார்கள் பின்னர் வேறு ஏழை பகுதியில் வெடித்தது.

மற்ற குண்டுவெடிப்பு மட்டும் வடகிழக்கு மூலதனம், மற்றும் பாக்தாத்தின் கிழக்கு புறநகர் பகுதியில் Kamaliya பகுதியில், Husseiniya ஒரு திறந்த விமான சந்தையில், அல் அமின் என்ற பாக்தாத் பகுதியில் வெடித்தது. அனைத்து எட்டு கார் குண்டுகள் மற்றும் இரண்டு ஆயத்தமில்லா வெடிபொருள் சாதனங்களை (IED க்கள்) மாலை 2:00 உள்ளூர் நேரம் (11:00 GMT) மூலம் வெடித்தது.


கற்றை உள்ள நாட்டின் ஆழமான பாதுகாப்பு பின்பற்ற
போலீஸ் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கிட்டத்தட்ட 88 பேர் குண்டுவெடிப்பில் கூறி, இறப்பு எண்ணிக்கை வழங்கப்படும்.

பாக்தாத்தில் இருந்து அறிக்கை அல் ஜஜீரா ஜேன் Arraf, தாக்குதல்கள் "நன்கு திட்டமிட்டு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட" என்று கூறினார்.

"நான் சாதாரண மக்கள் இருக்கும் போல் அங்கு சந்தை மற்றும் பிற இடங்களில் [குண்டுகள் வைக்கப்பட்டன]. இந்த midmorning இருந்தது, அதனால் அந்த இடங்களில் [...] நிரம்பியுள்ளது வேண்டும்," என்று அவர் கூறினார்.

டிக்ரிட்டில் போலீஸ், இதற்கிடையில், அவர்கள் வெடிக்க முன்னர் அவர்கள் 11 சாலையோர குண்டுகள் defused என்று ஞாயிறு காலை அவர், Arraf அறிக்கை.

ஈராக்கில் வன்முறை 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டில் குறுகிய சண்டை உயரத்தை இருந்து குறைந்து விட்டது, ஆனால் மரணம் தாக்குதல்கள் இன்னும் பொதுவான.

ஒரு தற்கொலை குண்டுதாரி ஒரு வடக்கு நகரம் அவரது வீட்டில் storming பின்னர் சனிக்கிழமை ஒரு உயர்மட்ட ஈராக்கிய இராணுவ புலனாய்வு அதிகாரி பலி
மற்றும் ஆயுத குழுக்களை 34 பேர் கொல்லப்பட்டனர், மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் ஷியா பகுதிகளில் கார் குண்டுகள் ஆஃப் அமைக்க.

ஞாயிறன்று தாக்குதல்களுக்கு பொறுப்பு இல்லை உடனடியாக கூற்று இருந்தது.

தாக்குதல்களை நாடு முழுவதும் AFP செய்தி நிறுவனம் மூலம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் அறிக்கை அடிப்படையில் ஒரு கணக்கு படி, குறைந்தது 150 இந்த மாதம் வன்முறை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை கொண்டு.

எகிப்து எதிர்ப்புக்களை கொண்டு போர்ட் ஸ்தம்பித்தது Said



எகிப்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கான துறைமுகத்தில் அணுகல் தடுக்கப்பட்டுள்ளது மற்றும் போர்ட் கடந்த மாதம் கலவரங்களில் கொல்லப்பட்ட மக்கள் டஜன் கணக்கான இறப்பு குறித்து நீதி கோரி Said மாநில கட்டிடங்கள் வெளியே அணி திரண்டன.

ஞாயிறன்று வன்முறை போர்ட் இருந்து 21 பேர் வழிவழியாக மரண தண்டனை மேற்பட்ட 70 பேர் கொல்லப்பட்டனர் இதில் ஒரு வருடம் முன்பு நகரம் ஒரு கால்பந்து மைதானம் பேரழிவு தங்கள் தொடர்பு Said மீது கோபம் தூண்டப்படுகிறது.

தீர்ப்பு போர்ட் மக்கள் இருந்தனர் கண்டனம் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் பெரும்பான்மை, யாரை பல அப்பாவி கூறுவது எங்கு, Said கோபமூட்டி.

"கீழ்ப்படியாமை" ஞாயிறு தினம் போர்ட் தான் அல் Masry, அரங்கம் பேரழிவு பிப்ரவரி 2012 ல் ஏற்பட்டது போது Ahly கெய்ரோ அல் எதிராக ஒரு வீட்டில் போட்டியில் விளையாடும் என்று கிளப்பின் ஹார்ட்கோர் கால்பந்து ஆதரவாளர்கள் அழைத்தார்.


போராடுகின்ற இளம் ஜனநாயகத்தின் ஸ்பாட்லைட் பாதுகாப்பு பின்பற்ற
அல் ஜஜீரா இன் Rawya Rageh, கெய்ரோ இருந்து அறிக்கை, எதிர்ப்பு "ஒரு முழு ஸ்தம்பித்தது நகரம் கொண்டு" இலக்காக அவர் கூறினார்.

"ஒரு சில ஆயிரம் நகரம் மண்டபம், துறைமுக அதிகாரசபை, தொழில்துறை மண்டலம் மற்றும் ரயில் தடங்களை பகுதிகள் உட்பட முக்கிய அரசாங்க கட்டிடங்கள், முற்றுகையிட முட்டை, போர்ட் Said மூலம் அணிவகுத்து," Rageh கூறினார்.

சாட்சிகள் 3,000 பேர் கெய்ரோவில் உள்ள படிக்க ஒரு தீர்ப்பு மூலம் ஆஃப் அமைக்க ஜனவரி 26 வன்முறை காரணமாக அந்த மரண தண்டனை கோரி, எதிர்ப்பில் பங்கு பெற்றனர் தெரிவித்தார்.

"எங்கள் வாழ்க்கையை கொண்டு, எங்கள் இரத்தம், நாங்கள் உங்களுக்கு தியாகிகள் நம்மை அர்ப்பணிப்போம்: நீங்கள் பழிவாங்க அல்லது நீங்கள் இறக்க ஒன்று!" அவர்கள் முழக்கமிட்டனர்.

"ஒத்துழையாமை ஒரு நாள் நீடிக்கும் மற்றும் தொடர்ந்து என்று கொலையாளிகள் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் 'அழைப்புகள்
உயிர்த்தியாகிகளின் வழங்கப்பட்டது அல்ல, "அஹ்மத் Mutwalli, போர்ட் Said ஒரு அரசியல் ஆர்வலர் கூறினார்.

எதிர்ப்பாளர்கள் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

பொது அகமது Najeeb, போர்ட் Said பொது ஆணையத்தின் தலைவர், எதிர்ப்பு மத்தியதரைக்கடல் துறைமுக கப்பல் நடவடிக்கை பாதிக்கப்படவில்லை கூறினார்.

துறைமுக ஜனாதிபதி மொஹமட் Mursi கடந்த மாதம் அமைதியின்மை காரணமாக அவசரகால ஒரு 30 நாள் அரசு அறிவித்தது அங்கு சூயஸ் கால்வாய் அருகே மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது.

ஜமாஅத்தாக செயற்பட வேண்டுமா?


ஜமாஅத்தாக செயற்படுவது என்பதன் அடிப்படைகளும் ஷரீஆ அனுமதியும் எந்த ஆதாரமும் தேவையில்லாதளவுக்கு உறுதியாகியுள்ளன. அறிஞர்களின் கூற்று பின்வருமாறு அமைகின்றது: “இமாம்கள் மகத்தான பிக்ஹின் சொந்தக்காரர்களாக இருந்தனர். அவர்கள் ஷரீஅத்திற்கான பொதுவான அடிப்படைகளை அறிந்திருந்தனர். அதுமட்டுமன்றி, இந்த அடிப்படைகளை சாத்தியத்தியப்படுத்துவதற்கு தேவையானவற்றையும் தெரிந்திருந்தனர். கடமையை பூரணப்படுத்த எது அவசியமோ அதனை நிறைவேற்றுவதும் கடமையாகும் என்பதனையும் அறிந்திருந்தனர். அவர்கள் தனித்துப் போவதனை விட்டும் தவிர்ந்து கொண்டனர். தோளோடு தோள் சேர்த்து, ஜமாஅத்தாக செயற்பட்டனர். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதில் ஜமாஅத்தாக செயற்படுவதன் அவசியத்தை தெளிவான பத்வாக்களாலும் சீரிய வழி காட்டல்களாலும் தெளிவுபடுத்தினர். ஜமாஅத்தாக செயற்படுவதாயின் அதற்கென்று ஒரு தலைவர் இருக்க வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது: “நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரை உங்களின் தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்."

இந்த மார்க்கத்தை கடைப்பிடித்தொழுகும் ஜமாஅத்களை உருவாக்க பாடுபடும் போது சிலர் இதனை வித்தியாசமாகப் பார்க்கக் கூடும். இந்த சொல்பாவனைகள் எவ்வித கருத்துமற்ற, புதுமையானவை எனக் கருதுகின்றனர். ஆனால், ஜமாஅத் சார்ந்த சொற்களை எமது இமாம்களும், புகஹாக்களும் பாவித்துள்ளர்.
இமாம் இப்னு தைமியா ஜமாஅத்தாக செயற்படுவது விடயமாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
ஸஈம் என அறபியில் குறிப்பிடப்படுகின்ற சொல்லின் அர்த்தம் தலைவர், பொறுப்பாளர் என அமையும். இது விடயமாக அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை-பாத்திரத்தை- இழந்து விட்டோம். அதனை எவர் கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச்சுமை (தானியம் சன்மானமாக) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி என்று கூறினார்கள்." (12:72) இங்கு பொறுப்பாளி என்ற கருத்து கையாளப்பட்டுள்ளது. யார் ஒரு கூட்டத்தினரை பொறுப்பெடுக்கிறாரோ அவர் பொறுப்பாளி, தலைவர் எனக் கருதப்படுவார்.
ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டு செயற்பாடு என்பது இந்த மார்க்கத்தை சரியாக விளங்கி, அதற்காக தூய்மையாக செயற்படுவதன் விளைவே இதுவாகும். எனவே, தெளிவான விளங்கமும், தூய எண்ணமும் காணப்பட வேண்டும். அப்போதுதான் தெளிவாக செயற்பட முடியுமாக இருக்க முடியும்.
“(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம். அல்லாஹ் மிகத் தூய்மையானவன். ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."(12: 108)
வேண்டப்படும் செயற்பாடு ஓய்வின்றி, தொடராக போராடுவதாகும். அல்லாஹுதஆலா படைப்புக்களில் மிகச்சிறந்த படைப்பாகிய நபியவர்களுக்கு பின்வருமாறு கூறுகிறான்:
“இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக" (73 : 02)
“எழுந்து நிற்பீராக" என்ற கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு சத்தியத்திற்காக 23 வருடங்கள் செயற்படுவதற்கான தெளிவான கட்டளையாக இருந்தது. நபியவர்கள் அமைதியின்றி, ஓய்வை அறியாது செயற்பட்டார்கள். கதீஜா (றழி) அவர்கள் நபியவர்களிடம் ஓய்வெடுக்குமாறு வேண்டிய போது இவ்வாறு பதிலளித்தார்கள்: “கதீஜாவே! தூங்கும் காலம் முடிந்து விட்டது." இன்று நாம் இவ்வாறு கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கிறோமா?
இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் களக்கமான கட்டத்திலுள்ளனர். அவர்கள் அதிகமாக செயற்படவும், போராடவும், தியாகம் செய்யவும், நிலைத்திருக்கவும், இஹ்லாஸுடன் இருக்கவும் வேண்டும். தனியாகப்போய் செயற்பட வேண்டுமென சிந்திப்பவர் எந்தவொன்றையும் செய்யமாட்டார். இவ்வாறு சிந்திப்பதன் காரணம் பார்வைத்தெளிவின் குறைபாடு ஆகும் அல்லது சீரான கலைத்திட்டத்தை கடைப்பிடிக்காமை ஆகும் அல்லது செயற்பட வேண்டுமென்பதிலுள்ள உணர்வு வறுமையாகும்.
அல்லாஹுதஆலா நபி (ஸல்) அவர்களுக்கு வரையறுத்த, செயற்படுவதற்கான, இலகுவான, ஆழமான, தெளிவான, திட்டத்தை வரையறுத்துக் கொடுத்தான். அதுதான் நபிமார்கள், றஸூல்மார்களின் போக்கின் சுருக்கமாகவும் இருந்தது. ஸஹாபாக்கள் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தாபிஈன்கள் அதன்படி செயற்பட்டார்கள். அந்த திட்டத்தின் நாகரீகம் உலகம் பூராக ஆட்சி செய்தது. அதன் பிறகு தூய்மையாக செயற்படும் தாஈக்கள் (அழைப்பாளர்கள்) பின் தொடர்ந்தார்கள். ஸலபுஸ் ஸாலிஹீன்கள் செய்தவற்றை அவர்கள் உயிர்ப்பித்தார்கள். மேலும், பயணிப்பதற்கான பாதையைத் தெளிவுபடுத்தினார்கள். இந்தப் போராட்டம் தொடர்ந் தேர்ச்சியானதாக இருந்தது. இமாம் ஹஸனுல் பன்னா வருகை தந்து, ஒரு முஸ்லிம் சகோதரன் செயற்படுவதற்கான படித்தரங்களை நுணுக்கமாக வரையறுத்தார்கள். அவற்றை ஏழு படித்தரங்களாக பின்வருமாறு வரையறுத்தார்கள்:
01. தனது உள்ளத்தை சீர்செய் வது: அவன் பலமான உடல் கொண்டவனாகவும், உறுதிமிக்க பண்பாடுகள் உடையவனாகவும், தெளிவான சிந்தனையுள்ளவனா கவும், உழைக்கும் திறனுள்ளவனாவும், மாசற்ற அகீதாவுடையவனாகவும், சீரான இபாதத் செய்பவனாகவும், உள்ளத்துடன் போராடுபவனாகவும், நேரத்தை பேணுபவனாகவும், தனது விவகாரங்களை திட்டமிட்டு ஒழுங்குற செய்பவனாகவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ளவனாகவும் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு சகோதரனதும் கடமையாகும்.
02. இஸ்லாமிய வீட்டை உருவாக்குவது: அவன் தனது குடும்பம்தான் சுமந்திருக்கும் சிந்தனையை மதிப்பதற்கு பழக்க வேண்டும். அவன் இல்லற வாழ்வின் அனைத்து நிலைமைகளிலும் இஸ்லாத்தின் ஒழுக்கங்களை பேணுபவர்களாக குடும்பத்தினரை உருவாக்க வேண்டும். அவன் தனது மனைவியைத் தெரிவு செய்து, அவளது உரிமை, கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களை இஸ்லாத்தின் அடிப்படையிற்கு ஏற்ப வளர்த்தெடுக்க வேண்டும். இது அனைத்து சகோதரர்களினதும் கடமையாகும்.
03. சமூகத்திற்கு வழிகாட்டுதல்: சமூகத்திலே நன்மையைப் பரப்புதல், மானக்கேடானவற்றுக்கும் வெறுக்கத்தக்கவற்றுக்கும் எதிராகப் போராடுதல், சிறந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊக்குவித்தல், நன்மையை ஏவுதல், நல்ல விடயங்களை செய்வதற்கு முந்திக்கொள்ளுதல், இஸ்லாமிய சிந்தனையின்பால் பொது மக்களின் கருத்தை சம்பாதித்தல், எப்போதும் பொது வாழ்வின் வெளிப்பாடுகளை இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் புடம்போட்டுப்பார்த்தல். இது ஒவ்வொரு சகோதரனதும் ஜமா அத்தினதும் கடமையாகும்.
04. நாட்டை விடுவித்தல்: நாட்டை அரசியல் அல்லது பொருளாதார அல்லது ஆன்மீக ரீதியான அந்நிய கெடுபிடியிலிருந்து விடுவித்தல்.
05. அரசாங்கத்தை சீர்செய்தல்: அது உண்மையான இஸ்லாமிய அரசாங்கமாக இருக்க உழைத்தல். இதன் மூலமே தனது உம்மத்திற்கான ஊழியன் என்ற வகையில் அவனது பணி நிறை வேற்றப்பட்டதாக அமையும். அந்த உம்மத்தின் நலனுக்காக செயற்பட்டதாக அது அமையும். ஒரு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கும் காலமெல்லாம் அது இஸ்லாமிய அரசாங்கமாக இருக்கும். அவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதனை வெளிப்படையாக செய்பவர்களாக இருக்கக் கூடாது. அந்த அரசாங்கம் இஸ்லாத்தின் சட்டங்களையும் அதன் போதனைகளையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
அதன் பண்புகள்: பொறுப்பை உணர்ந்திருத்தல், குடிமக்கள் மீது அன்பு வைத்திருத்தல், மனிதர்களுக்கு மத்தியில் நீதியாக நடத்தல், பொதுச்சொத்து விடயத்தில் பேணுதலாக நடத்தல், அதில் நடுநிலையைப் பேணுதல்.
அதன் கடமைகள்: பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல், கல்வியைப் பரப்புதல், படைப்பலத்தை தயார் செய்தல், ஆரோக்கியத்தைப் பேணுதல், பொது நலன்களைப் பேணி நடத்தல், வளங்களை அபிவிருத்தி செய்தல், செல்வத்தை பாதுகாத்தல், பண்பாடுகளைப் பலப்படுத்தல், தஃவாவைப் பரப்புதல்.
06. முஸ்லிம் உம்மத்திற்கான சர்வதேச கிலாபத்தை தயார்படுத்தல்: நாடுகளை விடுவித்து, அவற்றின் கண்ணியத்தை உயிர்ப்பித்து, அதன் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தி, எல்லோரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் இழந்த கிலாபத்தை மீளக் கொண்டுவந்து, எதிர்பார்க்கப்படும் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.
07. உலகத்தையே ஆளும் சக்தி (உஸ்தாதிய்யதுல் ஆலம்): இஸ்லாமிய பிரச்சாரத்தை உலகம் பூராக பரப்புவதன் மூலமாக இது சாத்தியமாகும். “பித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்." (2:193), “காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்." (9: 32).
இறுதியான இந்த நான்கு படித்தரங்களும் அனைத்து இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும் கடமையானவை ஆகும். அதுமட்டு மன்றி, முஸ்லிம் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இவை கடமையானவை ஆகும். இந்தப் பொறுப்புக்கள் எவ்வளவு பாரமானவை! இந்தப் பணிகள் எவ்வளவு மகத்தானவை! இவற்றை மனிதர்கள் கற்பனையாகக் கருதுவார்கள். ஆனால், ஒரு சகோதர முஸ்லிம் அவற்றை யதார்த்தமானவையாகக் கருதுவான். எமக்கு அல்லாஹ்விலே மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
“அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். ஆனால், மக்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்." (12:21)
ஷெய்க். முஹம்மத் அப்துல்லாஹ் அல்கதீப்
Blogger Wordpress Gadgets