Facebook Twitter RSS

Monday, January 28, 2013

Widgets

முஸ்லிம் சமூகப் பிளவும், இஸ்லாம் சொல்லும் தீர்வும்




எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்


இன்று முஸ்லீம்கள் தாங்கள் அறிவு தரவேறுபாட்டால் இஸ்லாத்திற்க்கு பல்வேறு வகையான விளக்கங்களை அளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வழிகேடர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்று செல்லி திரிகிறார்கள். இப்படி அலைவது சரிதான ? இதற்க்கான தீர்வு தான் என்ன ? அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் தான் என்ன என்று பார்ப்போம்.
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கு கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கு கட்டுப்படுங்கள்.
(அல் குர்ஆன் 4:59)
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
 
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள்...
(அல் குர்ஆன் 3:102,103)
 
நிச்சயமாக நீங்கள் ஒரே சமுதாயம் தான். நான் தான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்.
(அல் குர்ஆன் 23:52)
 
ஈயத்தால் வார்க்கப்பட்ட கட்டிடத்தைப் போல் ஓரணியில் நின்று அல்லாஹ்வின் பாதையில் போரிடக்கூடியவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல் குர்ஆன் 61:4)
 
தம் மார்க்கத்தைப் பிளந்து பலபிரிவுகளாகிவிட்ட இணைவைப்பேரில் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.
(அல் குர்ஆன் 30:31)
 
சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.
(அல் குர்ஆன் 8:46)
 
தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் கருத்து முரண்பட்டு பிரிந்துவிட்டவர்கள் போல் ஆகிவிடாதீர்கள். அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு.
(அல் குர்ஆன் 3:105)

 
(தண்டணை வழங்கப்படும்) அந்த நேரத்தில் (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மை பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்த தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டணை பெற்றே தீர்வார்கள் மேலும் அவர்களுக் கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்
(அல் குர்ஆன் 2:166)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அபூ ஹீரைரா (ரலி) அறிவித்தார்கள்.
இமாம் ஒரு கேடயம் ஆவர். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்.
 அல்லாஹ்வின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்த ஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவார். ஆனால் பைஆ செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலியா மரணமடைபவராவர் (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
 எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை)வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுபடாமல்அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் ஜாஹிலிய மரணத்தை அடைவார். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில் தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்பவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும் ஏனெனில், ஒருவர்(இஸ்லாமியக்)கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில்) இறந்துவிட்டால் அவர் ஜாஹிலிய மரணத்தை தழூவியவர் ஆவார். (புகாரி)
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்து போய்விடும் அவற்றில் ஒன்று அழியும்போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள் அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழிந்துபோகும் இறுதியாக அழிந்து போவது தொழூகையாகும். (அஹ்மத்)
 
உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்,
நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை, தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை, அடிபணிதல் இன்றி தலைமைத்துவம் இல்லை. (தாரமி)
 
 ...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறினார்கள். அவை 1.ஜமாத் - ஒன்றினைந்து வாழ்தல் 2. அஸ்ஸம்உ – தலைமையின் ஆணையைச் செவியேற்றல் 3. தாஅத் - தலைமைக்குக் கட்டுபடுதல் 4. ஹிஜ்ரத் - தியாகப்பயணம் மேற்க்கொள்தல் 5. ஜிஹாத் - அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல். ஒருங்கினைந்து வாழூம் சமுதாய அமைப்பிலிருந்து ஒருவர் ஒரு சாண் அளவு வெளியே சென்றாலும் அவர் தனது கழூத்திலிருந்து இஸ்லாத்தின் கட்டை அவிழ்த்து விட்டார். மீண்டும் தீரும்பிவரும்வரை இதே நிலையில்தான் இருப்பார். யார் ஜாஹிலிய்யாவை செயல்படுத்திட அழைப்பு விடுகிறாரோ முழந்தாளிட்டவராக நரகத்தில் நுழையும் கூட்டத்திலிருப்பார். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் கேட்டனர். அவர் தொழூதாலும் நோன்பு நோற்றாலும் இதே நிலைதானா? அதற்கு ஆம் அவர் தொழூபவராக நோன்பு நோற்பவராக தன்னை முஸ்லிம் என்று கருதிக் கொள்பவராக இருப்பினும் சரிதான் என்று கூறிய நபி (ஸல்) தொடர்ந்து சொன்னார்கள். ஆனால் (உண்மையான)முஸ்லீம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம்கள்இ முஃமின்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று அழையுங்கள். (அறிவிப்பாளர்: அல்ஹாரிஸ் அல் அஷ்அரீ (ரலி) (அஹ்மத் இப்னு கதீர்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

முஸ்லிம்களே உங்களுக்கு பொருப்பாரை ஏற்படத்தி அதன் மூலம் இருலகிலும் வெற்றி பெற போகிறீர்களா ?

இல்லை நாளை மறுமையில் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விரண்டோடும் தலைவர்கள் பின்னால் செல்லப் போகிறீர்களா ? 

முஸ்லீம்களே, உங்கள் ஈருலக வெற்றி உங்கள் கையில்!!!

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets