Facebook Twitter RSS

Tuesday, October 08, 2013

டாலரை காக்கும் செளதி அரேபியா!!!

அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால்அதைச் செய்வது சாத்தியமா?கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதிஇறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
இப்போது ஒரு பிளாஷ்பேக்...

Wednesday, October 02, 2013

கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.

Monday, September 30, 2013

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்


    உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

Tuesday, September 24, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் பகுதி 3

புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்


மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

Dheenai Nilai Naatungal Athil Pirinthu Vidaatheergal

Saturday, August 24, 2013

மிக மோசமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது வரலாற்றில் மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் ஆட்சியில் இருந்த நிர்வாகம் எடுக்காத நடவடிக்கையாக அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் மொஹமட் பதீயை கைது செய்து சிறைவைத்துள்ளது.

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள்


         
 சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை  மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?

Source:viruviruppu.com
ற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2

திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்
இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம் சந்திக்கவில்லை.

Sunday, July 07, 2013

அதிபர் முர்ஸி தடுத்து வைக்கப்பட்டுள்ள “குடியரசு காவற் படையினரின்” தலைமையகத்தினுல் துப்பாபக்கி வேட்டு சத்தங்கள் கேட்டுள்ளன!!


The impact of military coup in Egypt, the Muslim Brotherhood Algerian military regime feared repressive attitude


Rabaa வில் பல்லாயிரக்கணக்கான எகிப்திய இஹ்வானிய ஆதரவாளர்கள் திரண்டு எகிப்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரபாவின் ஜாமியா மஸ்ஜித்தில் இந்த எதிர்ப்பார்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி எகிப்திய இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் இராணுவ நிலையில் முர்ஸியின் படம் பொருந்திய புரட்சிக்கான அழைப்பு போஸ்டரை ஒட்ட முற்பட்ட போதே தலையில் சுடப்பட்டுள்ளார்.

மேற்கின் அரசியலில் சிக்கி தவிக்கும் அராபிய அரசியல் - ஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் !?


   
கிப்தின் இடைக்கால அரசிற்கு  சவூதி மன்னர் அப்துல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நிகழ்வுகளும் அங்கீகாரமும் திட்டமிட்டபடி நடந்துள்ளன . செக்கியுலரிசம்  வேசஸ் இஸ்லாம் என மக்கள் இரண்டு முகாம்களாக்கப் பட்டு மோத விடப்பட்ட நிலையில் மீண்டும் இராணுவம் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு இந்த ஆட்சி மாற்ற நாடகத்தை பக்குவமாக அரங்கேற்றியுள்ளது . இந்த இடத்தில ஆட்சிக்கடிவாளம் யாரின் கையில் இருந்திருக்கின்றது என்ற இரகசியம் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது .

Thursday, April 04, 2013

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?


பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடிக்கும் சமயத்தில், “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என யார் கூறுகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

Tuesday, April 02, 2013

தாலிபானை ஒடுக்க இந்தியாவும் சீனாவும் ஓரே அணியில்





என்ன தலைப்பே ஆச்சரியமாய் உள்ளதா?. ஆப்கானிலிருந்து அமெரிக்க 

படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாய் வெளியாகும் 

நெருங்கும் வேளையில் ஆப்கன் மக்களும் அரசும் அதை வரவேற்க, 

ஆப்கனின் அண்மை நாடுகளோ கவலையுடன் அதை பார்த்து 

கொண்டிருக்கின்றன. 

ஆப்கனின் அண்டை நாடுகள் அமெரிக்காவின் வெளியேற்றத்தால் கவலைப்படுவதற்கு காரணம் அமெரிக்காவின் வெளியேற்றம் தாலிபான்களின் எழுச்சிக்கு காரணமாகி விடும் எனும் அச்சமே. அதனாலேயே தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து விட்டு கூட்டணி வைத்து கொள்ள முயல்கின்றன.

Saturday, March 30, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் ... பகுதி 1




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!


முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.

Sunday, March 24, 2013

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!



நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.
இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.
தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

Friday, March 22, 2013

இஸ்லாம் கூறும் தண்ணீரின் தன்மைகள் .....



அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.27:60

Saturday, March 16, 2013

ஆண்களுக்கான விசேஷ உணவு :-



பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா

 இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

Wednesday, March 13, 2013

தர்பூசணி உடல்நல நன்மைகள்:-



இதை நம்ம ஊரு வயாகரா என்றும் கூறலாம்

இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவரும் எண்ணுவோம். நம் ஊரின் முக்கிய வீதிகளில் இப்பொழுதே தர்பூசணி கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. தர்பூசணி வெய்யில் காலத்தில் அதிகம் உண்ணக்கூடிய உணவாகும். இதில் பல பயன்கள் உள்ளன.

நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.

அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

தர்பூசணியின் பயன்கள்:

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த விடமின் ஸீ யும் விடமின் அ (ஒரு துண்டு பழத்தில் 14.59 . ஆஃப் விடமின் ஸீ அண்ட் 556.32 . ஆஃப் விடமின் அ) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு விடமின் ப்6 ம் விடமின் ப்1 ம், கனியுப்புக்களான . அண்ட் . மும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

சீர்திருத்தம் தேவை !


இன்றைய காலத்துக்கு மிகவும் தேவையான கட்டுரை
சீர்திருத்தம் செய்யுங்கள்!
இஹ்யா உலூமித்தீனிலிருந்து...

[ ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை! என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.]
''மக்களை நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழு உங்களில் இருக்க வேண்டும்'' என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
''அவர்கள் நல்லதை வலியுறுத்துவார்கள்; தீயதை தடை செய்வார்கள். இவர்களே வெற்றியாளர்கள்'' இந்த திருவசனம் மற்ற அனைத்தையும் விடத் தெளிவான ஆதரவை நமக்குக் கொடுக்கீறது.. ''ஒரு குழு உங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும்'' எனும் வார்த்தைகள் சீர்திருத்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. இதே வார்த்தைகள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இந்த வழியில் இறங்க வேண்டியதில்லை - ஒரு சிலர் இறங்கினால் போதுமானது என்றும் தெளிவு படுத்துகின்றன.
எனவே சமுதாயத்தில் ஒருவர் அல்லது ஒரு குழு சீர்திருத்த முயற்சியில் இறங்க வேண்டியது கடமையாகும். இந்த கடமையை யாரும் செய்யவில்லை என்றால் சமுதாயத்த்ல் அத்தனை பேரும் குற்றவாளிகளாகிறார்கள்.
மற்றோர் இறை வசனத்தில் ''முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் பெண்களும் சிலருக்குச் சிலர் நண்பர்கள்; அவர்கள் நன்மையை வலியுறுத்துவார்கள்; தீமையைத் தடை செய்கிறார்கள்; இறை வணக்கத்தை நிலைப்படுத்துவார்கள். சீர்திருத்த மனப்பான்மை உள்ளவர்களே உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியும் என்ற உண்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இதனை வெறுக்கிறவர்கள் சிறந்த முஸ்லிம்களாக இருக்க முடியாது. என்பது உட்கருத்து.
திருக்குர்ஆன் மீண்டும் பேசுகிறது; ''தமக்குக் கூறப்பட்டதை எல்லாம் அவர்கள் மறந்திருந்தபோது, தீமையைத் தடுத்து நிறுத்தியவர்களை நாம் காப்பாற்றினோம். அட்டூழியம் செய்தவர்களுக்கு நாம் கொடிய தண்டனை கொடுத்தோம். ஏனெனில், அவர்கள் தவறு செய்து கொண்டிருந்தார்கள்!''.
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றவர்கள் சிலர், தமக்குக் கூறப்பட்ட எச்சரிக்கைகளை எல்லாம் மறந்துதான் வாழ்ந்தார்கள். இருந்தும் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துவிட்டது. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டான். ஏன் தெரியுமா? தீமைகளை விட்டு விலகி நின்றார்கள்; தீமையைச் செய்யக்கூடாது என மக்களுக்கு போதித்தார்கள்.
மற்றொரு இறைவசனம் இப்படி கருத்துத் தெரிவிக்கிறது; ''உங்கள் முன்னோரில் உறுதியுள்ள சிலர் நாட்டில் நடக்கும் தீய விளைவுகளைத் தடுத்துக் கொண்டிராவிட்டால் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து போயிருப்பார்கள்!'' அழிவுக்குக் காரணம் சீர்திருத்த முயற்சியின்மை என்னும் உண்மை இங்கு வெளியிடப்படுகிறது.
''முஸ்லிம்களில் இரு சாரார் போரிட்டுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்'' என்று திருக்குர்ஆன் மற்றோர் இடத்தில் கூறுகிறது.
''முரண் வழியில் செல்லும் சாராரை எதிர்த்துப் போராடுங்கள்!'' என்று வேறொரிடத்தில் அது தீர்ப்பு கொடுக்கிறது.
அடுத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் நடந்த விறுவிறுப்பான உரையாடலைப் பார்ப்போம்.
''ஒரு காலம் வரும். அப்போது பெண்கள் துரோகம் செய்வார்கள். ஆண்கள் நேர்மையை மறந்து குற்றம் புரிவார்கள். மனப்பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.!'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
''அப்படியா நடந்து விடப்போகிறது?'' நண்பர்கள் திகைத்தார்கள்.
''நடக்காமல் என்ன! இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்படும்!''
''இதைவிட மோசமான சூழ்நிலையா!'' நண்பர்களின் திகைப்பு இன்னும் அதிகமானது.
''அப்போது மக்கள் நன்மையை எடுத்துக் கூறிச் சீர்திருத்தம் செய்ய மாட்டார்கள்; தீமையைத் தடுக்க மாட்டார்கள்!''
''அப்படியா!'' என்று மட்டுமே நபித்தோழர்களால் திகைப்பும் கவலையுமாக கேட்க முடிந்தது.
''அப்படியேதான்!'' என்றார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
தொடர்ந்து; ''அப்போது நீங்கள் உலகில் இருந்தால், நல்லதை கெட்டது என்று கருதுவீர்கள்; கெட்டதை நல்லது என்று நம்புவீர்கள்!' என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நபித்தோழர்களில் ஒருவர் கேட்டார், ''யா ரஸூலல்லாஹ்! அப்படியொரு காலம் வருமா என்ன?''
''நிச்சயமாக வரும். இதைவிட மோசமான விளைவு ஏற்படும். அப்போது நீங்கள் நல்லதை கெட்டது என்று கருதுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கருத்தை எடுத்துரைத்து மக்களைத் தூண்டுவீர்கள். இதே போன்று கெட்டதை நல்லது என்று எண்ணுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள். அதை மக்களுக்கு கூறி அவர்களையும் கெடுப்பீர்கள். நன்மை நடந்தால் அதற்கு தடை விதிப்பீர்கள். தீமை நடந்தால் அதற்கு ஊக்கம் கொடுப்பீர்கள்!''
நண்பர்கள் எதுவும் பேசமுடியாமல் மவுனமானார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தொடர்ந்தார்கள்; ''இப்படியொரு காலம் ஏற்படத்தான் போகிறது! இதில் சிறிதும் சந்தேகமே இல்லை. சூழ்ந்து நிற்கும் துன்பங்களைப் பார்த்து பொறுமை சாலிகள் கதிகலங்கி நிற்பார்கள்!' -இந்த செய்தியை நமக்குக் கூறுபவர் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தம் சமுதாயத்தைப் பார்த்துப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் பேசுகிறார்கள்: ''அநியாயமாக ஒரு மனிதனை மற்றொரு மனிதன் வதைக்கிறானா? அந்த இடத்தில் (வேடிக்கைப் பார்த்துக்கொண்டு) நிற்காதீர்கள். இந்த வேலையைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இறைவனின் சினத்துக்கு இலக்காகிறார்கள். தடை செய்யும் துணிவு உங்களுக்கு இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்!'
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த மற்றோர் செய்தி: ''உங்கள் நாவன்மையால் தீர்வு காண வேண்டிய பிரச்சனை எதிர்பட்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு உரிமையுண்டு, துணிந்து தடை செய்யுங்கள். இதனால் உங்களுக்கு எவ்விதப் பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!'' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதர்களும் அவர்களது தோழர்களும் எப்படி செயலாற்றுகிறார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள்;
''உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதருக்கும் குறிப்பிட்ட சில நண்பர்கள் இருப்பார்கள். திருத்தூதர் மக்களுக்கு மத்தியில் சிறிது காலம் தங்கியிருப்பார்; இறை வேதத்தை அடிப்படையாக வைத்து வாழ்க்கை நடத்துவார். வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இறந்து விடுவார்.
அதற்கப்புறம் அவர் நடந்து காட்டிய வழியில் அவரது நன்பர்கள் நடப்பார்கள். மக்களுக்கு வாழும் வழியைக் கற்றுக் கொடுப்பார்கள். தீயவற்றைத் தடுப்பார்கள். நல்லவற்றை எடுத்துரைத்துத் தூண்டுவார்கள். அவர்களும் சிறிது காலத்தில் இறந்து போய்விடுவார்கள்.
அதற்கப்புறம் மேடை ஏறிப் பிரச்சாரம் செய்யும் சிலர் சமுதாயத்தில் தோன்றுவார்கள். தமக்கு முன்னால் அறிவுரை கூறிய நபித் தோழர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேடையில் ஏறியதும் அவர்கள் தமக்குத்தெரிந்ததை மக்களுக்குக் கூறுவார்கள். தீயவற்றை ஒதுக்கி வைத்துத் தூய வழிட்யில் நடக்குமாறு போதனை செய்வார்கள். ஆனால், அவர்கள் மேடையை விட்டு இறங்கியதும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயலாற்றுவார்கள். நல்லதை ஒதுக்கித் தள்ளுவார்கள். தீயதை எடுத்து நடப்பார்கள்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது உங்கள் சக்தி முழுவதையும், ஒன்று திரட்டிக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும். இது உங்கள் கடமை. இது உங்களுக்கு சாத்தியமில்லாவிட்டால் உங்கள் நாவன்மையால் அவர்களை எதிர்த்து முறியடியுங்கள். இதுவும் அசாத்தியமாகத் தெரிந்தால் மனத்தலவிலாவது அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்! இந்த அட்டூழியம் பரவினால் எங்கும் இஸ்லாம் இருக்காது' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு மஸூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
''அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை!'' என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.
ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
ஒரு நபிக்கு இறைவன் செய்தியனுப்பினான்; ''உம்முடைய சமுதாயத்திலிருந்து 1,00,000 பேரை நான் அழிக்கப் போகிறேன். அவர்களில் கெட்டவர்கள் 60,000 பேர்; நல்லவர்கள் 40,000 பேர்!'' என்று.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்; 'இறைவனே! கெட்டவர்களைத் தான் அழிக்கிறாய். நல்லவர்களை ஏன் அழிக்க வேண்டும்?''
இறைவன் பதிலளித்தான்; ''தீமை நடக்கும்போது அவர்கள் சினமுற்று எழவில்லை!''
( - இஹ்யா உலூமித்தீனிலிருந்து... மொழியாக்கம்: மவ்லவி, எஸ். அப்துல் வஹ்ஹாப், பாகவி )

Tuesday, March 12, 2013

வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !



* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள்:-



அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

பக்க விளைவு மருந்துகள்

தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.

அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

ஹார்மோன் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (.) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.

ஆண்களுக்கு ஆபத்து

புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பேரிச்சம் பழத்தின் உடல்நல நன்மைகள்:-



பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.


பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இளம் பெண்கள் பெரும்பாலானவர்களுக்கு இரத்த சோகை உள்ளது. இதனால் குழந்தைப் பேறு காலகட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ளுங்கள் இரத்த சோகையைப் போக்கிக் கொள்ளுங்கள்.

வளரும் குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vitamins:

Vitamin A - 15 IU
Vitamin B1 (thiamine) - 0.076 mg
Vitamin B2 (riboflavin) - 0.097 mg
Niacin - 1.873 mg
Folate - 28 mcg
Pantothenic Acid - 0.866 mg
Vitamin B6 - 0.243 mg
Vitamin C - 0.6 mg
Vitamin E - 0.07 mg
Vitamin K - 4 mcg

Minerals:

Potassium - 964 mg
Phosphorus - 91 mg
Magnesium - 63 mg
Calcium - 57 mg
Sodium - 3 mg
Iron - 1.5 mg
Selenium 4.4 mcg
Manganese - 0.385 mg
Copper - 0.303 mg
Zinc - 0.43 mg

Monday, March 11, 2013

தஞ்சை பாராட்டு விழாவிற்கு ரூ 50,000 கோடி செலவாம்!!!!!!!


இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வருவதற்கான வாகன செலவை அ.தி.மு.க மாவட்ட கழகம் ஏற்றுக் கொண்டது. மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து எல்லாம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை திரட்டி வந்திருந்தார்கள். தலைக்கு 200 முதல் 500 ரூபாய் பணம், இரண்டு வேளை சாப்பாட்டு செலவை உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவு! இந்த பணம் எல்லாம் யாருடையது  அ.தி.மு.க ,கழக பணமா ???

Sunday, March 10, 2013

இளநீரின் உடல்நல நன்மைகள்



கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அன்புநிறை ஜமாத்தார்கள் அனைவருக்கும் நிர்வாகத்தினரால் விடுக்கப்படும் அன்பான வேண்டுகோள்!
நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். தொடங்கி இருக்கும் வேலை எவ்வித தொய்வுமின்றி நடந்தேறவும் புனித ரமலானுக்கு முன் இப்பணி நிறைவு பெறவும் வல்ல அல்லாஹ்விடம் ’துஆ’ செய்வதுடன், தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அவர்களிடமும் தெரியப்படுத்தி பொருளதவி செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CHEQUE, DD அனுப்ப UNION BANK OF INDIA, NAGAPATTINAM-BRANCH, SB-A/C NO : 45340 20100 90168 OF JAMIA MASJID MANJAKKOLLAI.

இங்ஙனம்,
தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்கள்.

இந்த நோட்டீஸ் மூலம் மஞ்சை நிர்வாகத்தினர்கள் ஊர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Saturday, March 09, 2013

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்



பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் ளாக்டோ இருக்கிறது.
தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
Blogger Wordpress Gadgets